வணக்கம்
Sⱥthΐรh
விநாயகர் படத்தருகில் இருந்த சுவர்க்கடிகாரம் ஒன்பது அடித்து ஓய்ந்தது. வீடு அமைதியாக இருந்தது. ஹாலில், எப்போதும் கலகலப்பாகப் பேசித் திரியும் பாரதி, அன்று வீட்டின் அறையில் உள்ளே அமைதியாக உட்கார்ந்து இருந்தாள். அவளுடைய பெரியப்பாவுக்கும் பெரியம்மாவுக்கும் அவள் அமைதியாக இருப்பதைப் பார்த்து அவர்களுக்கு வருத்தமாகவும், அதே நேரத்தில் அவர்களுக்குப் புதிராகவும் இருந்தது.அவள் அண்ணன் சிதம்பரம் கல்லூரிக்குச் செல்வதற்கு ஆயத்தமானான்.